×

டூவீலர்கள் விபத்தில் வாலிபர் பலி

 

சின்னமனூர், ஆக. 1: சின்னமனூர் அருகே சீலையம்பட்டி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சூர்யா (18). இவர் படித்து விட்டு பூக்கடையில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் சேர்ந்த அருண்குமார் (21) தனது டூவீலரில் அமர்த்தி சின்னமனூருக்கு நேற்று மாலை வேகமாக சென்று கொண்டிருந்தனர்.

அப்போது புறவழிச்சாலையில் எதிர்புறமாக சின்னமனூர் ஜக்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்த வாழை அறுக்கும் கூலி தொழிலாளி மூர்த்தி (42) என்பவர் தனது டூவீலரில் சீலையம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். வேகமாக வந்த வாலிபர்கள் நேரு க்கு நேர் மோதி சம்பவ இடத்திலேயே சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அருகில் இருந்தவர்கள் மூ ன்று பேரையும் மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.

The post டூவீலர்கள் விபத்தில் வாலிபர் பலி appeared first on Dinakaran.

Tags : Chinnamanur ,Surya ,Seelayambatti Ambedkar Street ,
× RELATED கால்வாய் தூர்வாரும் பணி ஜரூர்